திருக்குறள் கதை 24

முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24

83 / 100 SEO Score

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 24) அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி என்னும் அதிர்ஷ்ட மாலை நம் கழுத்தில் விழும் என்பதை எடுத்துரைக்கும் முயன்றால் முடியும் கதையையும், குறளையும் உடையது.

விதியை நொந்துகொண்ட ரகு

ரகு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அது அவ்வாறே நடக்கும் என நினைத்தான். ஆனால், ஏன் அப்படி நடக்கிறது என்று அவர் சிந்திக்கவில்லை.

ரகு இப்போது தலையெழுத்தைப் பற்றி யோசிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தன்னுடைய நேரத்தை அதிகம் வீணாக்கி விட்டான்.

ஒரு சில தவறுகளால் தான் நினைத்த ஒரு காரியத்தில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அவன் இப்போது தன்னை துரதிர்ஷ்டசாலி என நினைக்கத் தொடங்கியிருந்தன்.

நண்பனின் ஆறுதல்

ரகு ஆழ்ந்த கவலையில் இருப்பதைக் கண்ட அவனது நண்பன் சேகர் அவனருகே அமர்ந்து என்னடா… யோசனையில் இருக்கே… அப்படின்னு கேட்டான்.

ரகு மிகுநத வேதனையோடு, நான் எந்த வேலையை செய்தாலும் அது வெற்றி அடைவதே இல்லை. அந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டமில்லாதவனாக இருக்கேன்டா… என்றான்.

சோம்பேறித்தனமும், சில தவறுகளும்தான் உன்னுடைய தோல்விகளுக்கு காரணம் என்பதை நீ கொஞ்சம் கூட யோசிக்காமல், அதிர்ஷ்டத்தின் மீது நீ பழி போடுவதைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முயன்றால் முடியும்

நீ முதலில் உன்னிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்று. உன் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்பதை பட்டியல் இடு.

தோல்வியின் விளிம்பில் இருந்தவர்கள் பலரும், அவர்களின் விடா முயற்சியினால் வெற்றி கண்டதை நினைத்துப் பார்.

முயற்சிகளை தொடராமல், சும்மா இருந்துவிட்டு அதிர்ஷ்டத்தை நினைத்து பார்ப்பது முட்டாள்தனம்.

நம்பிக்கையோடு நீ எடுத்த முயற்சியில் வெற்றி பெற தொடர்ந்து அடியெடுத்து வை. நிச்சயமாக நீ நினைத்தது நிறைவேறும். முயன்றால் சாதிக்க முடியும் என்று ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டினான் சேகர்.

ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். திருவள்ளுவர் ஒரு குறட்பா மூலம் சொல்லி இருப்பதையும் உன்னிடம் நினைப்படுத்த வேண்டும்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டுன்றுங் களிறு

(குறள் – 597)

யானையானது போர்க் களத்தில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும்.

அதுபோல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்தாலும் மனம் தளராமல் தம்பெருமையை நிலை நிறுத்தப் பாடுபடுவார்கள் என்று சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்.

உன்னை யானை போல் பலம் பொருந்தியவனாக நினைத்துக் கொண்டு விடா முயற்சியையும், திறமையையும் உன் பாதையில் செலுத்து வெற்றி மாலை தானாக உன் கழுத்தை தேடி வரும் என்றான் சேகர்.

சேகரின் அறிவுரையை கேட்ட ரகுவுக்கு ஒரு புதுத்தெம்பு வந்தது. நிச்சயமாக நான் நினைத்த காரியத்தை செய்து முடித்து வாழ்கையில் வெற்றியாளனாக வருவேன்டா சேகர் என்று அவனை கட்டிப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தான் ரகு.

திருக்குறள் கதை 23 – நம்மை அழிக்கும் கோபம்

மகனை திட்டும்போது அம்பானியை வம்புக்கு இழுத்த அப்பா

83 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply