கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி
84 / 100

கிருஷ்ணாவதாரம் விஷ்ணு பகவானின் 8-ஆவது அவதாரமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தென்னிந்தியாவில் இதை கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கிறார்கள். வடமாநிலங்களில் இதை கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்.

கோகுலாஷ்டமி விரதம்

இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கிருஷ்ண பகவானை வழிபட்டால், வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் நினைத்த காரியங்கள் கைக்கூடும்.

ஐதீகம்

இந்த நாளில் பசுவுக்கு உணவளித்தால் நம் குடும்பம் அனைத்து நன்மைகளையும் பெற்று பெருவாழ்வு வாழும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பசுவுக்கு வெல்லம் தருவதால் பித்ரு தோஷம் விடுபடும் என்பதும் ஐதீகம்.

முன்னோர்களின் ஆசியும் பசுவின் வழியாக நமக்கு கிடைக்கும்.
நாம் இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் நீங்கி சுபவாழ்வு வாழ்வோம்.

மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டில் தாண்டவமாடும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

உலகின் பொக்கிஷ பூமி எது தெரியுமா?

கண்ணால் காண்பதெல்லாம் பொய்

வடஇந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி

ராச லீலா அல்லது தகி அண்டி (தயிர்க் கலசம்) என்ற பெயரில் வட இந்தியாவில் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

ராச லீலா என்பது கிருஷ்ணரின் இளமைக்கால வாழ்க்கையையும், கோகுலத்தில் அவர் இளம்பெண்களுடன் நடத்திய காதல் விளையாட்டுகளையும் இந்த ராச லீலா சித்தரிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் தகி அண்டி பிரபலம். அங்கு மிக உயரத்தில் தொங்க விடப்படும் வெண்ணைத் தாழியை சிறுவர்கள் கூம்புகளாக மற்ற சிறுவர்களை அமைத்து அவர்கள் மீது ஏறி அந்த வெண்ணைத் தாழியை உடைப்பது உண்டு.

இப்படி வெண்ணைத் தாழியை உடைத்தவர்கள் அப்பகுதி செல்வந்தர்கள் பரிசுப் பொருள்களை வழங்குவார்கள்.

கேரளாவில்

கேரளாவில் குருவாயூர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரள்வார்கள்.

தமிழகத்தில்

தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி மாலை நேரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் சிறு பிள்ளையாக வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் என்பதால், வீடுதோறும் சிறு பாதங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கோலமிட்டு வைத்திருப்பார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பாடல்களைப் பாடி, குழந்தைகளை கிருஷ்ணர், ராதை அலங்காரங்களை செய்து, அவர்களுக்கு முறுக்கு, சீடை உள்ளிட்ட பலகாரங்கள் வழங்குவது உண்டு.

ஏன் கிருஷ்ணனை கொண்டாடுகிறோம்?

ஸ்ரீகிருஷ்ணர் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் என்பதால்தான் அவரை இன்றளவும் கொண்டாடி மகிழ்கிறோம்.

அவரை கண்ணா, முகுந்தா என்று பல பெயர்களில் பக்தர்கள் அழைப்பதுண்டு.

கண்ணைப் போல் காப்பவன் கண்ணன் என்றும், வாழ்வதற்கு இடம் தந்து, முக்தி தரும் அவன்தான் முகுந்தன் என்றும் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ண அவதாரம்

மதுரா நகரில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக பிறந்தவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் பிறந்தது சிறைச் சாலையில்தான்.

சிறையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதாவால் வளர்க்கப்பட்டார்.

தனது தாய் மாமன் கம்சனை கொன்று கிருஷ்ணர் துவாரகையை ஆட்சிப் புரியத் தொடங்கினார்.

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து போர்க்களத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் இருந்தவர்தான் கண்ணன்.

பாரதப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக அவர் இருந்ததால்தான் அவரை பக்தர்கள் பார்த்தசாரதி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்த அறிவுரைகள் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை என்று அழைக்கப்படுகிறது.

கம்சன் ஏன் கிருஷ்ணனை கொல்ல விரும்பினான்?

கம்சனின் சகோதரி தேவகியை யாதவகுலத் தலைவர் வசுதேவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும். புதுமணத் தம்பதியரை கம்சன் தன்னுடைய தேரில் அமர்த்துகிறான். அதைத் தொடர்ந்து அவனே அந்த தேரை ஓட்டுகிறான்.

அப்போது வானில் ஒரு அசரீரி ஒலிக்கிறது. ஓ. கம்சனே… உன் சகோதரி திருமணம் முடிந்துவிட்டது. நீ மகிழ்ச்சியாக இப்போது இருக்கிறாய். அவளுக்கு நீ தேரோட்டியாய் வலம் வருகிறாய்.

ஆனால் உன்னுடைய சகோதரிக்கு பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை உன்னை வதம் செய்யப் போகிறது. அதுதான் உன்னுடைய முடிவு என்று சொன்னது.

இதைக் கேட்ட கம்சனுக்கு ஆத்திரம் வந்தது. உடனே தன்னுடைய வாளை உருவி தன்னுடைய சகோதரியை கொல்லத் துணிந்தான் கம்சன்.

இதைக் கண்ட மணமகன் வசுதேவர், கம்சனே ஆத்திரப்படாதே… அவளை வாழ்வதற்கு அனுமதி. அவளுடைய எட்டாவது குழந்தைத்தானே உன்னை கொல்லப் போகிறது.

அதுபோன்று ஒரு குழந்தை பிறப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் உன்னிடமே கொடுத்து விடுகிறேன்.

நீ அந்த சிசுக்களை அழித்துவிடு. தயவுசெய்து எங்களுடைய திருமண வாழ்வை கலைத்துவிடாதே என்று கெஞ்சினார்.

வசுதேவரின் கோரிக்கை கம்சனுக்கு நியாயமானதாகப் பட்டது. அதனால் அவர்கள் இருவரையும் வீட்டுக் காவலில் வைத்து சிறைப்படுத்தினான்.

கொடுங்கோலன் கம்சன்

முதல் குழந்தை பிறந்ததும், கம்சன் அதை கொல்லத் துணிந்தான். அப்போது தம்பதியார் எட்டாவது குழந்தைதானே கொல்லும். இந்த குழந்தை என்ன செய்தது… பாவம்… விட்டுவிடு என்று கெஞ்சினார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை கம்சன் ஏற்காமல் கொன்றான். இப்படி 6 குழந்தைகள் வரிசையாக கொல்லப்பட்டன.

கம்சனின் அரசு கொடுங்கோல் அரசாக இருந்தது. மக்கள் எல்லோருமே வேதனைக்குள்ளானார்கள். கம்சன் எப்போது அழிவான் என்று மக்கள் இறைவனை வேண்டினார்கள்.

7-ஆவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை தம்பதிக்கு ஏற்பட்டது. அதனால் வசுதேவர் அந்த குழந்தையை இரவில் கடத்திச் சென்று தன்னுடைய மற்றொரு மனைவி ரோகிணியிடம் ஒப்படைத்தார்.

அந்த குழந்தைக்கு பதில் உயிரற்ற ஒரு குழந்தையை கம்சனிடம் ஒப்படைத்தார். அப்படி ரோகிணியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைதான் பலராமன்.

எட்டாவது குழந்தை பிறக்கும் நேரத்தில் கம்சன் நிதானத்தை இழந்தான். தம்பதியரை சிறையில் அடைத்தான்.

இருவரையும் சங்கிலியால் பிணைத்து வைத்தான். சிறைக்குள் யாரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அவனுடைய நம்பிக்கைக்குரிய பணிப்பெண், பூதனை என்ற பெயர் கொண்டவள் மட்டுமே தேவகியை கவனித்துக் கொண்டாள்.

எட்டாவது குழந்தையாக அவதரித்த கண்ணன்

8-ஆவது குழந்தை பிறந்ததும், அக்குழந்தையை உடனடியாக தன்னிடம் ஒப்படைக்க அவளுக்கு கம்சன் கட்டளையிட்டிருந்தான். அதனால் அவள் கண்ணும் கருத்துமாக தேவகியை கவனித்து வந்தாள்.

பிரசவ காலம் நெருங்கியிருந்து. அப்போது பூதனை தன்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் அவசரமாக செல்ல வேண்டியிருந்தது.

வீட்டை அவள் அடைந்தபோது, பெருமழை பெய்தது. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

சிறையில் பலத்த இடியோசைக்கு இடையே 8-ஆவது குழந்தையான கண்ணன் பிறந்தான். அவன் பிறந்தபோது சிறைக் கதவுகள் தானாக திறந்துகொண்டன. எல்லா காவலர்களும் மயக்கமடைந்தனர்.

தம்பதியர் கைகளிலும், கால்களிலும் பூட்டப்பட்ட சங்கிலிகள் அறுந்தன.

இது தெய்வச் செயல் என்பதை உணர்ந்த வசுதேவர், அந்த சிசுவோடு யமுனை ஆற்றை கடந்தார். அப்போது யசோதா மயங்கிய நிலையில் பெண் குழந்தையை பிரசவித்திருந்தாள். அக்குழந்தையை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரை அவளிடம் கிடத்திவிட்டு அந்த பெண் குழந்தையுடன் சிறைக்கு வந்தடைந்தார் வசுதேவர்.

வீட்டிலிருந்து திரும்பிய பூசனை வசுதேவர் கையில் குழந்தை இருப்பதைக் கண்டாள். உடனடியாக கம்சனுக்கு தகவல் தெரிவித்தாள்.

அந் பெண் சிசுவை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டபோது, அக்குழந்தை அவன் கைகளில் இருந்து நழுவி கீழே விழுந்து பறந்து சென்றது.

சிறையல் கண்ணன் பிறந்த நாளைத்தான் இன்றைக்கு பக்தர்கள் கோகுலாஷ்டமி என அழைத்து கொண்டாடுகிறார்கள்.

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *