செவ்வாய் கிரகம் நிலத்தடியில் நீர்

செவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர்

82 / 100 SEO Score

நாசா எடுத்துள்ள முயற்சிகளில் முக்கியமானதாக செவ்வாய் கிரகம் தன்னுடைய நிலத்தடியில் நீரை வைத்திருப்பதை கண்டுபிடித்திருப்பதை சொல்லலாம்.

செவ்வாய் கிரகம் பற்றிய உண்மைகள்

செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கிரகம்.

இதனுடைய சுற்றுப்பாதையை இரவு நேரத்தில் பூமியில் இருந்து வெறும் கண்களால் எளிதாக கவனிக்க முடியும்.

பூமியில் இருந்து தொலைநோக்கிகள் மூலம் திடமான மேற்பரப்பு, வளிமண்டல நிகழ்வுகளை காண முடியும்.

இக்கிரகம் பல விஷயங்களில் பூமியுடன் ஒத்துப்போகிறது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிரகம் பூமியைப் போன்று அடர்த்தியான வெப்பமான வளிமண்டலமாக இருந்திருப்பது தடயங்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆறுகள், ஏரிகள், வெள்ளப் பாதைகள், பெருங்கடல்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்து பின்னர் அது ஒரு பாலைவனமாக மாறியிருப்பதும் இந்த தடயங்கள் மூலம் தெரியவருகிறது.

சூரியனில் இருந்து நான்காவது கிரகமாக இது இருக்கிறது. இது சூரியக் குடும்பத்தில் மிகச் சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக இருக்கிறது.

இதற்கு போர்க் கடவுளின் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு காரணமாக இக்கோள் நமக்கு செந்நிறமாகத் தெரிகிறது.

இது சுமார் 228 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் அதாவது சூரியனில் இருந்து பூமியின் தூரத்தைக் காட்டிலும் சுமார் 1.5 மடங்கு தூரத்தில் இருக்கிறது.

இந்த கிரகத்தின் நீளமான சுற்றுப் பாதை காரணமாக செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் 206.6 மில்லியன் முதல் 249.2 மில்லியன் கி.மீட்டர் வரை மாறுபடுகிறது.

அது சூரியனை பூமியின் நாள்களுக்கு 687 நாள்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

அதேபோல் இந்த கிரகம் தனது அச்சில் 24 மணி 37 நிமிடங்களுக்கு ஒரு முறை சுழல்கிறது.

இதன் மேற்பரப்பு சந்திரனில் இருப்பது போல் கிண்ணக் குழிகளையும், புவியில் காணப்படுவதுபோல் எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

இது போபோசு, டெய்மோசு என்ற இரு நிலவுகளைக் கொண்டிருக்கிறது.

செவ்வாய் கிரகம் மனிதன் வாழ தகுந்ததா?

ஆனால், அந்த நிலத்தடி நீரை இன்றைய சூழலில் வெளிக்கொணருவது என்பது இன்றைய நவீன தொழில்நுட்பங்களால் கூட சாத்தியமாகாது என்பதுதான்.

இதனால் இக்கிரகத்தில் தற்போதைய நிலையில் மனிதர்கள் சென்று வசிக்கக் கூடிய நிலை உருவாகவில்லை.

ஒருவேளை நாம் இன்னும் நிலத்தடியில் மிக ஆழமாக அதாவது 10 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் ஆழம் வரை மிக எளிதாக துளைப்போடக் கூடிய கருவிகளை கண்டுபிடித்தால் கிரகத்தில் உள்ள நீரை வெளியில் கொண்டு வருவது சாத்தியமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் பென்டகன் கட்டடத்தின் சிறப்பு

82 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply