திருக்குறள் கதைகள் 34

எது வலிமை? – திருக்குறள் கதை 34 சொல்வதென்ன?

83 / 100 SEO Score

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 34) எது வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான விளக்க சிறுகதையையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.

அரசனும், கிளிகளும்

ஒரு நாட்டை ஆண்ட அரசன் காட்டுக்கு குதிரையில் பயணமானார். அவரை மரம் ஒன்றில் அமர்ந்திருந்த கிளி ஒன்று பார்த்தது.

உடனே அது அடி, உதை, பிடி, கொள்ளையடி என்று கத்தியது. இது அரசனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அவர் அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள் மற்றொரு மரத்தில் இருந்த கிளி வாங்க… வாங்க.. என்று அழைத்தது.

அரசனுக்கு அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. இரு கிளிகளையும் யாரோ பேசுவதற்கு பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

அரண்மனைக்கு திரும்பி வந்த அரசன், தன்னுடைய அமைச்சரை அழைத்து இந்த அதிசயத்தைச் சொன்னார்.

அமைச்சரின் விளக்கம்

இதைக் கேட்ட அமைச்சர் சொன்னார். ஒரு கிளியை வளர்த்தவர்கள் தீயவர்கள். அதுவும் கொள்ளையர்கள். அவர்கள் என்ன பேசுகினார்களோ… அதையே அது பின்பற்றி பேசியது.

மற்றொரு கிளியோ, நல்லவர்களின் வளர்ப்பாக இருந்திருந்திருக்கிறது. அந்த கிளியை வளர்த்தவர்கள் உபசரிப்பு எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதனால் இரு கிளிகளும் வெவ்வேறு வார்த்தைகளை பேசியதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.

எது வலிமை - திருக்குறள் கதைகள் 34

இது கிளிகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். ஒருவன் நல்லவர்களோடு சேர்ந்து பழகினால்,அவனுக்கு நல்ல எண்ணங்களும், நல்ல வார்த்தைகளுமே வெளிப்படும்.

ஒருவன் தீயவர்களோடு பழகினால், தீய குணங்கள் தொற்றிக் கொள்வதோடு, மற்றவர்களை மிரட்டும் வார்த்தைகளையும், காயப்படுத்தும் வார்த்தைகளையுமே பேசும் குணம் ஏற்பட்டுவிடும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை .

(குறள்- 444)

எது வலிமை?

தம்மினும் அறிவில் சிறந்த பெரியவர்களை தனது சுற்றமாகச் சேர்த்துக் கொண்டு அவர் வழி நடத்தலே ஒருவரின் வலிமைகளில் எல்லோவற்றிலும் சிறந்த வலிமை என்கிறார் குந்த குந்தர் என்றார் அமைச்சர்.

திருக்குறள் கதைகள் 33 – உள்ளத்தால் உயர்வு

கடலுக்கு அடியில் ஆக்சிஜன் உற்பத்தி எப்படி

83 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply