Property Documents: காணவில்லையா?

property documents
74 / 100

சொத்துப் பத்திரங்களை (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்து விட்டால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.,

முதல் தகவல் அறிக்கை

.முதலில் நாம் சொத்துப் பத்திரங்கள் தொலைந்து விட்டது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதியச் செய்ய வேண்டும்.

அவர்கள் தரும் ஒப்புகை ரசீதை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அசல் பத்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது தொலைந்து போனது என்ற விவரங்களுடன் ஒரு தமிழ் நாளிதழ், ஒரு ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.

property documents


விளம்பரத்தில் தொலைந்து போன ஆவணங்கள் யார் கையிலாவது கிடைத்தால், தகவல் மற்றும் அனுப்புவது தொடர்பான விவரங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற வேண்டும்.


குறிப்பிட்ட நாள்கள் கழித்து காணாமல் போன பத்திரம் குறித்து யாரும தகவல் தராத நிலையில், காவல் நிலையத்தை அணுகி நாளிதழ் விளம்பரங்கள் அளித்து not traceable கடிதத்தை பெற வேண்டும்.

அதைத் தொடர்ந்து தொலைந்த பத்திரம் தொடர்பான ஆட்சேபனை இல்லை என்ற notary public ஒருவரின் சான்றிதழ் பெற வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகத்தை நாட வேண்டும்

பத்திரிகை விளம்பரம், காவல்துறை கடிதம், நோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆகியவற்றுடன் காணாமல் போன பத்திரத்தின் சர்வே எண் விவரங்கள் அடங்கிய தகவல்களை உங்கள் ஆவணங்கள் காணாமல் போன தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த சில நாட்களில் நகர் பத்திரங்கள் நமக்கு கிடைக்கும்.

74 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *