சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்தே படத்தின் முதல் சிங்கிள் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது.
மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆர்வம்
இப்பாடல் அண்ணாத்தேவின் முதல் தனிப்படலாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “புகழ்பெற்ற பத்ம விபூஷன் திரு எஸ்பிபி பாடிய அண்ணாத்தே ஃபர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் விரைவில் வெளிவர வருகிறது. அப்படத்தை காண அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.