நாசா எடுத்துள்ள முயற்சிகளில் முக்கியமானதாக செவ்வாய் கிரகம் தன்னுடைய நிலத்தடியில் நீரை வைத்திருப்பதை கண்டுபிடித்திருப்பதை சொல்லலாம்.
மனிதன் செவ்வாயில் வாழ முடியுமா?
ஆனால், அந்த நிலத்தடி நீரை இன்றைய சூழலில் வெளிக்கொணருவது என்பது இன்றைய நவீன தொழில்நுட்பங்களால் கூட சாத்தியமாகாது என்பதுதான்.
இதனால் செவ்வாய் கிரகத்தில் தற்போதைய நிலையில் மனிதர்கள் சென்று வசிக்கக் கூடிய நிலை உருவாகவில்லை.
ஒருவேளை நாம் இன்னும் நிலத்தடியில் மிக ஆழமாக அதாவது 10 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் ஆழம் வரை மிக எளிதாக துளைப்போடக் கூடிய கருவிகளை கண்டுபிடித்தால் செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரை வெளியில் கொண்டு வருவது சாத்தியமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.