மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள் எவை?

மத்திய பட்ஜெட் 2024
69 / 100

சென்னை: மக்களவையில் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான – மத்திய பட்ஜெட் 2024 – முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (23.7.24) தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

வருமான வரியில் மாற்றம் என்ன?

  • புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
  • புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் உடையவர்களுக்கு 5 சதவீதம் வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  • 10 முதல் 12 லட்சம் வரையிலும் 15 சதவீதம் வரி, 12 முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி.
  • 15 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  • பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

  • வரும் 5 ஆண்டுகளில் 1000 ஐடிஐக்கள் உருவாக்கப்படும்.
  • உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
  • 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
  • நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
  • பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
  • வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முதன் முறையாக பணிக்கு செல்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ரூ.15 ஆயிரம் வரை செலுத்தப்படும்.
  • வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகைகள்

  • உற்பத்தித் துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு உத்தரவாதம் இன்றி இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்திய தொழில் முனைவோருக்கு இக்கடனுதவி கிடைக்கும்.
  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்

  • பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  • தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியரர் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.
  • தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.


மாணவர்களின் உயர்கல்விக்கு கடனுதவி

  • நடப்பாண்டு பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவியை அரசு அளிக்கும். இந்த உதவி இ-வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும்.
  • இது ஆண்டுதோறும் நேரடியாக ஒரு லட்சம் மாணவர்களுககு வழங்கப்படும். கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.


டிஜிட்டல் மயமாகிறது வேளாண் துறை

  • வேளாண் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
  • விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவிகள் நபார்டு மூலம் வழங்குவது எளிதாக்கப்படும்.
  • அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தத் திட்டம்.
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு

  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
  • நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுககீடு செய்யப்படும்.
  • தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின்நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை.
  • புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கபபடும்.
  • மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
  • தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும்.
  • பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படும்.
  • அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது.
  • அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படும்.
  • வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதமாக இருந்த வரி 34 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
    லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


69 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *