திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

திருக்குறள் கதை 32
69 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 32) நாவடக்கம் இல்லாவிட்டால் நம்முடைய தகுதியை இழந்து மற்றவர்களிடத்தில் தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது இக்கதை.

மன்னனின் ஆணை

ஒரு நாட்டை ஆண்ட அரசன் நாவடக்கம் இல்லாதவனாக இருந்தான். அவன் ஒரு நாள் இரத்தினத்தை சுத்தம் செய்யும் முறையை அறிய ஆசைப்பட்டான்.

உடனடியாக அவன் ஒரு உத்தரவை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து இரத்தின வியாபாரிகளும் அரசவைக்கு உடனடியாக வர வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

அரசவையில் கூடிய வியாபாரிகளை பார்த்த, அரசன் நான் உடனடியாக இரத்தினங்களை சுத்தம் செய்யும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும். அதை நீங்கள் இப்போதை கற்றுத் தர வேண்டும் என்றான்.

இரத்தின வியாபாரிகள் எல்லோரும் தயங்கினார்கள். அமைச்சர் அவர்களை நெருங்கி ஏன் தயங்குகிறீர்கள் என்று மெல்ல கேட்டார்.

அதை உடனடியாக கற்றுத் தருவது இயலாதது. அதை எப்படி அரசரிடம் தெரிவிப்பது என்பதால் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்தனர்.

திருக்குறள் கதைகள் 32

அமைச்சர் இதை அரசனிடம் சொன்னால் கோபப்படுவான் என்பதால் அவர் அவர்களின் தயக்கத்தின் காரணத்தைச் சொல்லாமல் பேசாமல் நின்றுவிட்டார்.

எல்லோருடைய மவுனத்தையும் மீண்டும் அரசன் களைத்தான். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அரச தண்டனைக்கான நேரம் நெருங்கிவிட்டதாக அர்த்தம்.

சொல்லித் தர தவறினால் எல்லோரையும் சிரச்சேதம் செய்ய உத்தரவிட நேரிடும் என கடுமையாக எச்சரித்தான்.

அவசரப்பட்ட அரசன்

இரத்தின வியாபாரிகள் வயதான ஒருவர் நான் இப்போதே சொல்லித் தருகிறேன் அரசே… ஆனால் ஒரு நிபந்தனை என்றான்.

எந்த நிபந்தனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் சொல்லும் என்றான் அரசன்.

நான் கற்றுத் தருவதற்கு குருதட்சணை தர வேண்டும் என்றார் அந்த பெரியவர். அப்போதும் அரசன், கஜானா அதிகாரியை கூப்பிட்டு, இவர் என்ன தட்சணை கேட்கிறாரோ அதைக் கொடு என உத்தரவிட்டான்.

இந்த குருதட்சணை செல்வம் அல்ல. உங்களின் ஆற்றல். நீங்கள் எப்படி ஒரு நாட்டை அரசாட்சி செய்கிறீர்கள் என்பதை இப்போதே கற்றுக் கொடுத்தால், நான் இரத்தினங்களை சுத்தம் செய்வதைக் கற்றுத் தருகிறேன் என்றார் பெரியவர்.

அரசனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. பெரியவரே.. நான் எப்படி உடனே கற்றுத் தர முடியும். அதற்கு பல ஆண்டுகள் என்னோடு நீங்கள் இருந்தாக வேண்டும் என்றான் கோபமாக.

அரசனின் பதிலைக் கேட்ட முதியவர் சொன்னார், கோபப்படாதீர்கள். எப்படி ஒரு நாட்டை எப்படி அரசாட்சி செய்வது என்பதை உடனே கற்றுத் தர இயலாதோ, அது மாதிரிதான் இரத்தினத்தை சுத்தம் செய்யும் முறையை ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாது.

அதற்கு பல ஆண்டுகள் இரத்தின வியாபாரிகளுடன் இருந்து கற்க வேண்டியிருக்கும் என்றார் முதியவர்.

திருக்குறள் சொல்லும் கருத்து

இதைக் கேட்ட அரசன் தன்னுடைய தவறை உணர்ந்து தலைகுனிந்தான். அமைச்சரை அருகில் அழைத்து அனைவரையும் கௌரவித்து அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு, இரத்தின வியாபாரிகளிடம் மன்னிப்பு கேட்டான்.

இந்தக் கதை போன்று நாம் எதை காக்காவிடிலும், நாவையாவது காக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

(குறள் – 127)

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவர் சொன்ன சொல்லே அவரின் துன்பத்துக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அதன் பொருள்.

திருக்குறள் கதைகள் 31 – பொறுப்பும் சந்தேகமும்

இந்தோனேஷியால் பழைமையான குகை சித்திரம்

69 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *