திருக்குறள் கதைகள் 26: பொறுத்தல் எல்லை!

திருக்குறள் கதை 26
64 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 26) தனக்கு தீங்கு செய்தவனைத் தண்டிக்காமல் பொறுத்தல் என்பதன் இலக்கணத்தை விளக்கும் கதையும், குறளும் இடம்பெறுகிறது.

துறவம் பூண்ட அமைச்சர்

முன்னொரு காலத்தில் சுரமியம் என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவனிடம் அந்தணர் குலத்தைச் சேர்ந்த விசுவபூதி என்பவன் அமைச்சனாக இருந்தான்.

அவனுக்கு கமடன், மருபூதி என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். இருவரும் குணத்தால் வேறுபட்டிருந்தார்கள்.

புதல்வர்களுக்கு வசுந்தரி, வருணை என்ற பெயருடைய பெண்களை மணம் முடித்து வைத்தான் அமைச்சன்.

ஒரு நாள் விசுவபூதி தன் தலை முடியில் வெண்மையைக் கண்டான். அதனால் வாழ்வில் வெறுப்புற்றான். துறவரம் போவது என முடிவு செய்தான்.

அமைச்சரான இளைய மகன்

அதனால் தன்னுடைய இளைய மகன் மருபூதியை அழைத்தான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்று என் மகன் உங்களின் அமைச்சனாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

அரசருக்கும் அமைச்சரின் முடிவை ஏற்று மருபூதியை அமைச்சனாக்கினார்.

அரசரும், நாட்டு மக்களும் விரும்பியவாறு நல்ல அமைச்சனாக மருபூதி திகழ்ந்தான்.

அப்போது, வச்சிர வீரியன் என்னும் மன்னன் தன்னோடு போர் புரிய வருகிறாயா என்று சுரமியம் நாட்டின் மன்னன் அரவிந்தனுக்கு சவால் விடுத்து தூது விட்டான்.

அவனுடைய சவாலை ஏற்று போருக்கு தயாரானான். தன்னுடைய அமைச்சர் மருபூதியோடு படைப் பலத்தோடு போருக்கு புறப்பட்டுச் சென்றான்.

மூத்த மகனின் மோகம்

போருக்கு செல்வதற்கு முன்பு மருபூதியின் மூத்த சகோதரன் கமடனை வரவழைத்து தான் நாடு திரும்பும் வரை கவனமாக நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றான்.

ஆனால் கமடன் அரசர் கொடுத்த பொறுப்பை முறையை கவனிக்கத் தவறினான். போதாக்குறைக்கு தனது தம்பி மனைவி மீது மோகம் கொண்டான்.

அவளை தன்னுடைய மனைவியாகவும் ஆக்கிக் கொண்டான். இதையெல்லாம் மக்கள் தட்டிக் கேட்க முடியாமல் தவித்தார்கள்.

போருக்கு சென்ற அரவிந்தன், சவால் விட்டு அழைத்த அரசன் வச்சிர வீரியனை தோற்கடித்து வெற்றி வாகை சூடி உற்சாகமாக நாடு திரும்பினான்.

திருக்குறள் கதை 26

இளைய மகனின் மன்னிப்பு

நாட்டில் என்ன நடந்தது என்பதை விசாரித்தபோது, கமடனின் இழிச் செயல் தெரிந்து அதிர்ச்சியுற்றான்.

கமடன் செய்த தவறுக்கான தண்டனையை அமைச்சர் மருபூதி வழங்குவார் என்று நாட்டு மக்களிடம் மன்னர் தெரிவித்தார்.

மருபூதி தன்னுடைய மனைவியை அபகரித்த சகோதரனுக்கு மரண தண்டனை விதிப்பான் என்று அரசர் எதிர்பார்த்தார். நாட்டு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மருபூதி, நான் இநத நாட்டின் அமைச்சர் என்ற முறையில் இதற்கு முந்தைய காலங்களில் இத்தகைய தவறுகளை செய்தவர்களுக்கான தண்டனையை வழங்க அரசரை கேட்டுக் கொள்கிறேன்.

மருபூதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவன் இந்த நாட்டின் குடிமகன். அதனால் அரசர் வழக்கமாக விதிக்கும் தண்டனையே தன்னுடைய விருப்பமும் என்று அமைதியாக தெரிவித்தான்.

இதையடுத்து கமடனையும், அவனின் மோக வலையில் விழுந்த மருபூதி மனைவியையும் நாடு கடத்தும் வழக்கமான தண்டனையை மன்னர் அறிவித்தார்.

திருவள்ளுவரின் கருத்து

இதைத் தான் திருவள்ளுவர் தன்னுடைய குறட்பாவில்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று

(குறள் – 152)

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க. அந்த தீமையை மனத்துள் வைத்துக் கொள்ளாமல் மறத்தலே பொறுத்தலையும் விட நன்று என்று கூறியுள்ளார்.

திருக்குறள் கதை 25 – சொல்லாற்றல் வலிது

கணவரிடம் யோசனை கேட்ட மனைவி

64 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *