திருக்குறள் கதைகள் 23: நம்மை அழிக்கும் கோபம்

திருக்குறள் கதை 23
64 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 23) கோபம் நம்மையே அழித்துவிடும் என்பதை விளக்கும் சிறுகதையும், அதற்கான குறள் விளக்கமும் இடம்பெறுகிறது.

வெப்ப நோய் பாதித்த அரசன்

முன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் பல கலைகளை கற்றுத் தேர்ந்தவன்.

அதனால் அவன் இன்பத்தை மட்டுமே அனுபவித்து வந்தான். அவனது பேராசை காரணமாக வெப்பு நோய்க்கு ஆளானான்.

இதனால் துன்பம் அடைந்த அரசன் ஒரு கட்டத்தில் அதை தாள முடியாமல், தன் மூத்த மகன் அரிச்சந்திரனிடம், நீ கற்ற வித்தை மூலம் என் வெப்ப நோயைப் போக்கு என்று கேட்கிறான்.

தந்தையின் மீது அரிச்சந்திரன் குளிர்ந்த தென்றலை ஏவினான். இருந்தாலும் அவனுடைய வெப்ப நோய் தீரவில்லை.

ஒரு நாள் அரண்மனை மேல் மாடத்தில் நின்ற இரு மான்களிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவற்றின் ஒன்று காயமடைந்து, அதனுடைய குருதி மேல் மாடத்தில் இருந்து வழிந்து கீழே படுத்திருந்த அரசன் மீது விழுந்தது.

அந்த குருதி தன் மேலே பட்டதும், உடலில் வெப்பம் தணிந்ததை உணர்ந்தான் அரசன்.

திருக்குறள் கதை 23

உடனே அவன் தன்னுடைய இளைய மகன் குருவிந்தனை அழைத்தான். மகனே நீ உடனடியாக கானகம் செல்.

அங்குள்ள மான் கூட்டத்தை வேட்டையாடி, அவற்றின் இரத்தத்தால் கிணறு ஒன்றை உருவாக்கு. அதில் நான் குளித்து என் வெப்பத்தை தணித்துக் கொள்கிறேன் என்றான்.

அரசிடம் இது பாவச் செயல் என்று குருவிந்தன் எடுத்துரைத்தான். ஆனால் தந்தை அவனுடைய பேச்சை விரும்பவில்லை.

இதனால் ஒரு முனிவரை நாடி நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான். உன் தந்தை செய்த பாவச் செயல்களால்தான் இப்போது வெப்ப நோய்க்கு ஆளாகியிருக்கிறார்.

நீ மான் வேட்டையாடி அவர் அந்த ரத்தக் கிணற்றில் குதித்தாலும் அவருடைய வெப்ப நோய் விலகாது. வீணாக பாவம் செய்யாதே என்று அறிவுரை வழங்கினார்.

தன்னுடைய தந்தையை சமாதானம் செய்ய ஒரு செயற்கை குருதிக் கிணற்றை அமைத்தான். அதில் இறங்கி குளித்த அரசனுக்கு வெப்பம் தணியவில்லை.

கோபத்தின் எல்லையைத் தொட்ட அரசன் அரவிந்தன், தன் மகனை வாளால் வெட்டிக் கொல்ல துணிந்தான்.

அப்போது, அரசன் விதி வசத்தால், கால் இடரி அவனுடைய வாள் உருவி கீழே விழ, அதைத் தொடர்ந்து அவனும் அதன் மீது விழ, வாளால் வெட்டுண்டு இறந்து போனான்.

இந்த கதைப் போல தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள ஒருவன் நினைப்பானானால். அவன் கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி கோபத்தை அடக்கா விட்டால், அந்த கோபமே அவனை அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

அதைத்தான் தனது 305-ஆவது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

(குறள் – 305)

திருக்குறள் கதை 22 – விருந்தோம்பல்

அன்பு மகனுக்கு அப்பா எழுதியக் கடிதம்

64 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *