Indian Independence day: நினைவு போற்றுவோம்!

Indian Independence day
70 / 100

இந்திய சுதந்திர தினம் (indian independence day) – இத்தினத்தில் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு உயிர்நீ்த்த தியாகிகளை போற்ற வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகளின் கடமை.

தமிழர் பங்களிப்பு

இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சி வரலாற்றில் தமிழர்கள் குறிப்பிடும்படியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
1867-இல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு முன்பே 1757-ஆம் ஆண்டில் மன்னன் அழகுமுத்துக்கோன் நடத்திய போர்தான் முதல் இந்திய விடுதலைப் போர்.

அழகு முத்துக்கோன் (1728-1757) திருநெல்வேலி மாவட்டம், கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர்.

ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்ற எட்டயபுரம் மன்னரின் நண்பர். கான் சாஹிப் என்ற வெள்ளையனின் கைக்கூலியான தமிழின துரோகியிடம் பணிபுரிய மறுத்து அவனது பீரங்கி குண்டுகளுக்கு பலியானவர்.

பூலித்தேவன்

நெற்கட்டான்செவல் பாளையம் என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு பூலித்தேவன் என்பவர் ஆட்சி புரிந்தார். அவர் வெள்ளையரை கடுமை.யாக எதிர்த்தார்.

பூலித்தேவனின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத் தேவன் உள்ளிட்ட பலர் 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

1750-ஆம் ஆண்டு திருச்சிக்கு ராபர்ட் கிளைவ் வந்தார். அப்போது அவர் அங்கு ஆங்கிலக் கொடியை ஏறறி வைத்தார்.

அத்துடன் தென்னாட்டு பாளையக்காரர்கள் அத்தனை பேரும் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அறிவித்தார்.

இதனால் பூலித்தேவன் வெகுண்டெழுந்து திருச்சிக்கு தன்னுடைய படைகளோடு சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.

1755-ஆம் ஆண்டில் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டார் கெரான் என்பவருக்கு எதிராக அழகு முத்து சேர்வை படையோடு சென்று போரிட்டு வெற்றி பெற்றார்.

பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை சந்தித்தவர்.

வேலு நாச்சியார்

1752-ஆம் ஆண்டில் விசயகுமார நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் மீது கேப்டன் கோப் தலைமையில் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.

இதை அறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப் மற்றும் அவரது படையை விரட்டினார்.

மீண்டும் விசயகுமார நாயக்கரை மதுரை மன்னராக பதவி அமர்த்தினார்.

அவரது இறப்புக்குப் பிறகு அவருடைய மனைவி வேலு நாச்சியாரும் படைத் தளபதிகளான மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தனர்.

இப்படி அழகு முத்துக்கோன், பூலித்தேவன், முத்துராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன், வாளுக்கு வேலி அம்பலம் உள்ளிட்டோர் அந்நியர்களை எதிர்த்து போராடியவர்களில் முக்கியமானவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி

காலனித்துவ ஆட்சி என்று அழைக்கப்படும் பிரிட்டீஷ் ஆதிக்கம் 1757-ஆம் ஆண்டு பிளாசி போருக்கு பிறகு இந்தியாவில் தொடங்கியது.
பல்வேறு போர்களின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா வந்தது.

அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் 89 ஆண்டுகள் (1858-1947) ஆண்டார்கள்.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டே. இவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவ சிப்பாய்.

1857 மார்ச் 29-இல் கொல்கத்தாவை அடுத்த பாரக்பூரில் பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய புதிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து கலகம் செய்தார்.

உடல் நலத்துக்கும் நகத்துக்கும் உள்ள தொடர்பு

முதல் புரட்சி

அவர் உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்களின் கிளர்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது.
இதனால் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். இதுவே முதல் சுதந்திரப் போராடடமான சிப்பாய் கலகம் என வர்ணிக்கப்படுகிறது.

ஆனால் வரலாற்று ரீதியாக, 1806 ஜூலை 10-இல் தென்னிந்தியாவில் நடந்த சிப்பாய் புரட்சியே ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி.

தற்போது நாடு தன்னுடைய 78-ஆவது சுதந்திர தினத்தை (15.8.24) கொண்டாடுகிறது.
இத்தருணத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்.

வெப் ஸ்டோரிஸை காணுங்கள்.

70 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Garlic Health Benefits: பூண்டின் மருத்துவ குணங்கள் Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி இதயம் பேசுகிறேன் புற்றுநோய் வராமல் தடுக்க சில வழிகள் Indian Independence day salute