கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்
65 / 100

தமிழகத்தின் பெருமைமிகு பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில். இது சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையின் அருகே ஜெயங்கொண்டம் குறுக்குச் சாலையில் சுமார் 2 கி. மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்ட எல்லைக்குள் வருகிறது.

முதலாம் ராசேந்திர சோழன்

இந்த கோயிலையும், சோழ நாட்டின் தலைநகராக இந்த பகுதியையும் உருவாக்கியவர் முதலாம் ராசேந்திர சோழன்.

கோயிலில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாளிகைமேடு பகுதியில் சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் பெரிய அரண்மனை கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

அகழ்வாராய்ச்சி பணிகள்

அந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் அடிப்படையில் தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் கடந்த 2020-22-ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது.

அதில் செங்கல் கட்டுமானங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், செம்பு பொருள்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு போன்ற 1003 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த 2022 தொடங்கி நடத்தப்பட்டது. அதில் 1010 பொருள்கள் கிடைத்தன.

பாபநாசம் சிவன் ஆலயத்தில் பழங்கால நெற்களஞ்சியம்

65 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *