🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

உப்பு அதிகமானால் ஆபத்து!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

நம்முடைய உணவுக்கு சுவை கூட்டுவது உப்பு. ஆனால் அதை நாம் அதிகமாக உணவில் கலந்து சாப்பிடும்போது ஏற்படும் தீங்குகளால் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.

அதிக உப்பு ஆபத்து

நம்முடைய உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதிக உப்பு சத்தமில்லாமல் உயிரை கொல்லும் என்று சொல்வதுண்டு. இதனால்தான் நாம் உணவில் அதிகமாக அதை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

சர்க்கரை எப்படி உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறதோ, அதுபோல சால்ட் நம் உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறது.

ஆரோக்கியத்துக்கு 5 கிராம் போதும்

அதிக சால்ட் கலந்த உணவை நாம் சாப்பிடும்போது, குறிப்பிட்ட 5 கிராம் எடைக் காட்டிலும் கூடுதலாக உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் சில நேரங்களில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன.

நம் உடலில் அதிகமாக சால்ட் சேர்ந்திருப்பதை, வயிற்றுப் புண், இதய சுவரில் வீக்கம் ஏற்படுதல், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக் கல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படும்போதுதான் நாம் அறிகிறோம்.

உடலில் அதன் அளவு அதிகமாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறைந்து அது வலுவிழக்கிறது. சில நேரங்களில் நோய் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, சால்ட் உடலில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய்விடுகிறது.

இவற்றை சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராது

பருமனாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை

அதிக சால்ட் குறிப்பாக உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோய் பாதிப்படைந்தவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக வாய் ருசிக்காக சால்டை அதிகமாக உணவில் சேர்க்கிறோம். வழக்கமாக சேர்க்கும் சால்ட் அளவை பாதியாக குறைத்தாலே நமக்கு உப்பினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துவிட முடியும்.

உடலுக்கு சால்ட் தேவைதான். குறிப்பாக நம் உடலில் நீர்ச்சத்து, ரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால் அதிகப்படியான சால்ட் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. அவற்றில் அளவுக்கு அதிகமான உப்பு ருசிக்காகவும், பொருள் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சோடியம் குளோரைடு என்ற இரசாயண வேதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

உப்பு அதிகமானால் ஆபத்து!

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *