நம்முடைய உணவுக்கு சுவை கூட்டுவது உப்பு. ஆனால் அதை நாம் அதிகமாக உணவில் கலந்து சாப்பிடும்போது ஏற்படும் தீங்குகளால் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.
அதிக உப்பு ஆபத்து
நம்முடைய உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதிக உப்பு சத்தமில்லாமல் உயிரை கொல்லும் என்று சொல்வதுண்டு. இதனால்தான் நாம் உணவில் அதிக உப்பை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சர்க்கரை எப்படி உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறதோ, அதுபோல உப்பும் உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறது.
ஆரோக்கியத்துக்கு 5 கிராம் போதும்
உணவில் உப்பு சேர்க்கப்பட்ட உணவை உணவை நாம் சாப்பிடும்போது, குறிப்பிட்ட 5 கிராம் எடைக் காட்டிலும் கூடுதலாக உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் சில நேரங்களில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன.
உப்பு நம் உடலில் அதிகமாக சேர்ந்திருப்பதை, வயிற்றுப் புண், இதய சுவரில் வீக்கம் ஏற்படுதல், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக் கல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படும்போதுதான் நாம் அறிகிறோம்.
உப்பு உடலில் அதிகமாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறைந்து அது வலுவிழக்கிறது. சில நேரங்களில் நோய் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உப்பு அதிகம் உடலில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய்விடுகிறது.
இவற்றை சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராது
பருமனாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை
அதிக உப்பு குறிப்பாக உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோய் பாதிப்படைந்தவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக வாய் ருசிக்காக உப்பை அதிகமாக உணவில் சேர்க்கிறோம். வழக்கமாக சேர்க்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தாலே நமக்கு உப்பினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துவிட முடியும்.
உடலுக்கு உப்பும் தேவைதான். குறிப்பாக நம் உடலில் நீர்ச்சத்து, ரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால் அதிகப்படியான உப்பே நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. அவற்றில் அளவுக்கு அதிகமான உப்பு ருசிக்காகவும், பொருள் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சோடியம் குளோரைடு என்ற இரசாயண வேதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.