🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

மகாபாரதம் அர்ஜுனன்: திருக்குறள் கதை 13

Read in English / பிற மொழிகளில் படிக்க:

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 13 – மகாபாரம் அர்ஜுனன் தன் திறமையைக் காட்டியதையும், அதையொட்டிய திருக்குறள் விளக்கத்தையும் பெற்றிருக்கிறது.

ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் திருக்குறள் பாடல் ஒன்றின் விளக்கத்தை பார்க்கலாமா என்று கேட்டார்.

அய்யா… திருக்குறள் பாடல் விளக்கத்தை ஒரு கதையோடு சொன்னால் எங்கள் மனதில் பதியும் என்றான் ஒரு மாணவன்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

சரி… சொல்கிறேன் என கதை சொல்ல ஆரம்பித்தார் ஆசிரியர்.

அர்ஜுனன் திறமை

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களின் புத்திக் கூர்மையைச் சோதிக்க நினைத்தார்.

அவர்களிடம் அருகில் உள்ள மரக்கிளையில் உள்ள பறவையைப் பாருங்கள். அதன் வலது கண்ணை மட்டும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்பவரே வில்லாற்றலில் சிறந்தவர் எனக் கூறுவேன் என்றார்.

எவரும் முன் வரவில்லை. இச்செயலை அருச்சுனன் மட்டுமே முடிப்பான் எனவும் கருதினார்.

அவர் எண்ணியவாறே அருச்சுனன் பறவை அமர்ந்திருந்த மரத்தின் கீழே வந்து நின்றான்.

அவன் வில்லை நாணேற்றினான். இடக்கையில் பிடித்தவாறு வலக்கையால் இடத் தோளை ஓசையெழும்படித் தட்டினான்.

திருக்குறள் கதை 13 மகாபாரதம் அர்ஜுனன்

அவ்வோசையைக் கேட்ட பறவைத் திரும்பி பார்த்தது. அதன் உயிருக்கு ஊறு நேரா வண்ணம் வலக்கண்ணை மட்டும் குறிப் பார்த்து அம்பினால் எய்தான்.

நொடியில் பறவையின் சிறிய விழி கீழே வீழ்ந்தது. பறவையும் அவ்விடத்தை விட்டு அகன்றது. துரோணரும், மற்றவர்களும் அருச்சுனனின் திறமையை பாராட்டினார்கள்.

திருக்குறள் விளக்கம் என்ன?

இதைத் தான் குந்த குந்தர், இந்தத் தொழிலை இவன் வெற்றிகரமாக முடிப்பான் என்று கருதி அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

இதற்கான திருவள்ளுவரின் குறட்பா வரிகள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


(குறள்_517)

இச்செயலை இன்ன ஆயுதப் பலத்தாலும், பொருள் பலத்தாலும் முடிக்கக் கூடும் என்று எண்ணி அச்செயலை அவனிடம் விடுக என்கிறார் வள்ளுவர் என்றார் ஆசிரியர்.

அய்யா… ஒருவனிடம் உள்ள திறனை சோதிக்க ஒன்றும் அறியா பறவையின் கண்ணை பறிப்பது குற்றமாகாதா.. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டான் ஒரு மாணவன்.

இதற்கான விளக்கத்தை மற்றொரு நாளில் சொல்கிறேன் என்றார் ஆசிரியர்.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *