🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

காமெடி டயலாக் – கணவனுடன் சமரசம் செய்துகொண்ட மனைவி

Read in English / பிற மொழிகளில் படிக்க:

சிரிக்கவும் சிந்திக்கவும்


இது ஒரு சிரிப்பை தரும் காமெடி டயலாக்.
ஒரு பெண்ணின் கணவன் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருபவர். ஒரு நாள் இரவு அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டார்கள்.

தொலைக்காட்சியில் செய்தி

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது என்று தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாவதை பார்க்கிறார் அந்தப் பெண்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

பரவாயில்லையே… தினமும் வீட்டுக்கு குடித்துவிட்டு வரும் நம்ம வீட்டுக்காரர்கிட்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியதுதான் என்று முடிவு செய்கிறார் அந்தப் பெண்.

சிறிது நேரத்தில் அவரது கணவர் வீட்டுக்குள் நுழைகிறார்.

கணவன்-மனைவி காமெடி டயலாக்


மனைவி: என்னய்யா, குடிச்சிருக்கியா…. தள்ளாடி வர….


கணவன்: கோவிச்சுக்காத… கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம். அதனால் லைட்டா சாப்பிட்டேன்.


மனைவி: குடிக்கிறதுதான் குடிக்கிற அது என்ன லைட்டா… இனிமே ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா… சரியா…


கணவன்: நிஜமாத்தான் சொல்றியாடி… எங்க இன்னொரு தடவ சொல்லு…


மனைவி: வீட்டுக்கு வரப்போ, ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா…. அப்பதான் இனிமே சோறு போடுவேன்..

கணவன்:கடவுளே… இப்படி ஒரு பொண்டாட்டிய எனக்கு கொடுத்திருக்கியே… ரொம்ப ரொம்ப நன்றி.

அடியேய்… நீ எனக்கு பொண்டாட்டியா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்டி.

நாளைலேயிருந்து ஃபுல் சரக்குதான்… சரியா… ஆனால் கொஞ்சம் அதிகம் செலவாகுமே… உனக்கு பரவாயில்லையா…


மனைவி: தோ பாரு… டாஸ்மாக்குல போய் குடிக்காதே.. அதனால் எனக்கு ஒண்ணும் பிரயோஜம் இருக்காது.

பணமும் அதிகம் செலவாகும். பேசாம, அக்கம்பக்கத்துல 50 ரூபாய்க்கு கிடைக்கிற கள்ளச் சாராயத்தை வாங்கி குடி… அதுதான் இனிமே சரிப்பட்டு வரும்.

நீ போய்ட்டா கூட.. எனக்கு அரசாங்கம் 10 லட்ச ரூபாய் கொடுக்கும். அதை வாங்கிகிட்டு நிம்மதியா வாழ்வேன். அதனால கள்ளச் சாராயத்தை குடிச்சுட்டு வா.. சரியா….

காமெடி டயலாக்


கணவன்: என்னடி சொல்றே… எனக்கு இப்ப போதையே இறங்கியே போய்டுச்சு… பேசாம நான் போய் படுக்கிறேன்… காலையில நிதானமா பேசிக்கலாம். ஓ.கே.. குட் நைட்.


கள்ளச் சாராயம் இருக்கும் வரை, மதுபானக் கடைகளை அரசு நடத்தும் வரை இனி இப்படிக் கூட கணவன் மனைவிக்குள் ஒரு சமரசம் செய்துக்கொள்ள தமிழ்நாடு அரசு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கு.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *