சிரிக்கவும் சிந்திக்கவும்
இது ஒரு சிரிப்பை தரும் காமெடி ஜோக் (comedy joke). ஒரு பெண்ணின் கணவன் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருபவர். ஒரு நாள் இரவு அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டார்கள்.
மனைவி: என்னய்யா, குடிச்சிருக்கியா…. தள்ளாடி வர….
கணவன்: கோவிச்சுக்காத… கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம். அதனால் லைட்டா சாப்பிட்டேன்.
மனைவி: குடிக்கிறதுதான் குடிக்கிற அது என்ன லைட்டா… இனிமே ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா…
கணவன்: நிஜமாத்தான் சொல்றியாடி… எங்க இன்னொரு தடவ சொல்லு…
மனைவி: வீட்டுக்கு வரப்போ, ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா…. அப்பதான் சோறு போடுவேன்..
கணவன்:கடவுளே… இப்படி ஒரு பொண்டாட்டிய எனக்கு கொடுத்திருக்கியே… ரொம்ப நன்றி.
அடியேய்… நீ எனக்கு பொண்டாட்டியா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும். நாளைலேயிருந்து ஃபுல் சரக்குதான்… சரியா… ஆனால் கொஞ்சம் அதிகம் செலவாகுமே… உனக்கு பரவாயில்லையா…
மனைவி: தோ பாரு… டாஸ்மாக்குல போய் குடிக்காதே.. அதனால் எனக்கு ஒண்ணும் பிரயோஜம் இருக்காது. பணமும் அதிகம் செலவாகும். பேசாம, அக்கம்பக்கத்துல 50 ரூபாய்க்கு கிடைக்கிற கள்ளச் சாராயத்தை வாங்கி குடி… நீ போய்ட்டா கூட.. எனக்கு அரசாங்கம் 10 லட்ச ரூபாய் கொடுக்கும். அதை வாங்கிகிட்டு நிம்மதியா வாழ்வேன். அதை செய்….
கணவன்: என்னடி சொல்றே… எனக்கு இப்ப போதையே இறங்கி போய்டுச்சு… பேசாம நான் போய் படுக்கிறேன்… காலையில நிதானமா பேசிக்கலாம். ஓ.கே.. குட் நைட்.
கள்ளச் சாராயம் இருக்கும் வரை, மதுபானக் கடைகளை அரசு நடத்தும் வரை இனி இப்படிக் கூட கணவன் மனைவிக்குள் ஒரு சமரசம் செய்துக்கொள்ள தமிழ்நாடு அரசு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கு.