🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

இந்தியாவில் டிராம் வண்டிகள்: ஒரு வரலாற்று படைப்பு

Read in English / பிற மொழிகளில் படிக்க:

சென்னை: இந்தியாவில் டிராம் வண்டிகள் வரலாறு மிகவும் பழைமையானது. நாட்டில் இவை இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா.

ஆசியாவில் டிராம்கள்

இந்த வாகனங்கள் இயக்கம் ஆசியாவிலேயே பழமையானதாகும். 1873-ஆம் ஆண்டில் முதன்முதலில் கொல்கத்தாவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

இந்தியாவில் டிராம்கள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் இவை ஓடத் தொடங்கின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

டிராம்கள் சரக்குகளை துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

சென்னையில் அறிமுகம்

சென்னையில் 1877-இல் டிராம்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது இவற்றை குதிரைகள் இழுத்துச் சென்றன. தற்போதைய சென்னையின் பரபரப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாக விளங்கும் பூக்கடை பகுதியில் தற்போதைய காவல் நிலையத்தின் அருகே இன்னமும் ஒரு கம்பம் சென்னையில் டிராம் வாகனங்கள் பயணித்ததன் எச்சமாக நின்று கொண்டிருக்கிறது.

அதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் வாகன நிறுத்தத்துக்காக அமைத்த கொட்டகை மட்டும் இன்றைக்கும் காட்சிப் பொருளாய் இருக்கிறது.

டிராம் வண்டிகள்

1892-ஆம் ஆண்டில் மெட்ராஸ் டிராம்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன.

1895-ஆம் ஆண்டில் முதன்முறையாக சென்னை நகர வீதிகளில் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த நேரத்தில் லண்டன் போன்ற பெருநகரங்களில் கூட இத்தகைய டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்படவில்லை.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன?

விடியோவை காணுங்கள்

மக்கள் ஆர்வம்

1877-ஆம் ஆண்டில் சிறிய தண்டவாளத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையிலான வாகனங்களில் பயணிக்க சென்னை மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

இதற்காக மெட்ராஸ் டிராம் வேல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1895-ஆம் ஆண்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின.

இந்த டிராம்கள் சாலைகளில் பதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சென்றாலும், நமக்கு அவற்றால் டிராபிக் ஏற்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக இருந்தன.

இதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் மவுண்ட் ரோடு, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களிலும் டிராம்கள் ஓடத் தொடங்கின.

அந்த காலக்கட்டத்தில் ஒரு மைல் தூரத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாகனங்களை இயக்குவதற்கான மின்சாரம் டிராம் பாதையின் நடுவில் பூமியின் அடியில் கொண்டு செல்லப்பட்டது. அதில் அடிக்கடி பழுது ஏற்படவே, எலக்ட்ரிக் லைன்கள் அமைக்கப்பட்டு டிராம்கள் இயக்கப்பட்டிருக்கின்றன.

டிராம் வண்டிகளில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டினாலும் இதற்கு அதிக பொருட்செலவு ஆனது. இதனால் 1953-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் டிராம்கள் இயங்கவில்லை.

பறக்கும் கார் தயாரிப்பில் சென்னை ஐஐடி

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *