Read in English / பிற மொழிகளில் படிக்க:
குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 22) விருந்தோம்பல் சிறப்பு குறித்து குறட்பா விளக்கத்துடன் விவரிக்கிறது.
உள்ளடக்கம்
விருந்தோம்பல் தம்பதி
பரத கண்டத்தில் நரசில்பம் என்னும் நகரை சேடகன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது மனைவி பத்மாவதி. இவர்களின் மகள் பிரபாவதி.
மன்னன் சேடகன் தன் மகளை ஒத்தாயணன் என்னும் அரசனுக்கு மணமுடித்து வைத்தான்
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஒத்தாயணனுக்கு விருந்தோம்பலில் ஆர்வம் காட்டுபவன். அவனை மணந்த பிரபாவதியும் அவனுடைய விருந்தோம்பலுக்கு பக்கபலமாக இருந்தாள்.
ஒரு நாள் சௌதர்மேந்திரன் சபையில் இவர்களின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சோதித்த தேவன்
இதனைக் கேட்ட மணி சூளன் என்னும் தேவன் இவர்கள் இருவரையும் சோதிக்க விரும்பினான்.

அதனால் அவன் ஒரு தொழு நோயாளி வேடமிட்டு ஒத்தாயணன் இல்லத்துக்கு சென்றான். விருந்தினராக வந்த அந்த தொழு நோயாளியை ஓடோடி வரவேற்று அமர வைத்தான். அவனது மனைவி பிரபாவதியும் அந்த விருந்தினரை வரவேற்றாள்.
தேவனை இருவருமாக ஆசனத்தில் அமர வைத்து பாதங்களை நீரால் கழுவினர். அதைத் தொடர்ந்து அந்த கழுவிய நீரை தலையில் தெளித்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அந்த விருந்தினருக்கு உணவு பரிமாறினர். அவர்கள் அளித்த உணவை வயிறாற உண்டான் அந்த மாறு வேடத்தில் இருந்த தேவன்.
அப்போது திடீரென அவனுக்கு வாந்தி வரவே, பிரபாவதியும், ஒத்தாயணனும் அவன் எடுத்த வாந்தியை தங்கள் கரங்களிலே எந்த அருவருப்பும் இன்றி வாங்கி அப்புறப்படுத்தினர்.
அவரது உடலை தூய்மைப்படுத்தி மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர். இவர்களின் பணியில் அவர்களின் விலை உயர்ந்த ஆடைகளும் வீணானது.
தங்களுடைய உணவால் அவருக்கு இப்படி ஒரு இடையூறு ஏற்பட்டு விட்டதோ என அஞ்சி அந்த தொழு நோயாளியிடம் மன்னிப்பு வேண்டினர்.
அவர்களின் விருந்தோம்பலைக் கண்டு மெய்சிலிர்த்த தேவன், தன்னுடைய சுயரூபத்துடன் அவர்கள் முன் தோன்றினான்.
உங்களைப் பற்றி மக்கள் புகழ்ந்ததைக் கேட்டேன். நீங்கள் எந்த அளவுக்கு ஒரு விருந்தினரின் மனம் கோணாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை அறியவே நான் தொழு நோயாளியாக உங்கள் இல்லத்துக்கு வந்தேன்.
இதுவல்லவோ விருந்தோம்பல்
விருந்தோம்பலில் எந்த இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றமும், விருந்தினன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், மனதளவில் கூட அவனுடைய செயல்களின் மீது அருவருப்பு கொள்ளாமல் செய்த உங்கள் விரும்தோம்பல் என்னை மெய்மறக்க வைத்துவிட்டது.
நட்பின் இலக்கணம் திருக்குறள் கதை
உங்களைப் போன்ற விருந்தோம்பலில் சிறந்த தம்பதியை இதுவரை நான் காணவில்லை. நீங்களும், உங்கள் குலமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். உங்களின் மறுபிறவியில் எங்களின் விருந்தினராக ஆவீர்கள் என்று கூறி மறைந்தான்.
திருக்குறள் விளக்கம்
இதைத் தான் வள்ளுவன் தன்னுடைய குறட்பாவில் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
( குறள்-86)
இந்தப் பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களுக்கெல்லாம் விருந்தினராவான் என்கிறார் குறளாசான்.
பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு அறம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருபவர். குறளமுதக் கதைகள் நூலின் ஆசிரியர். அகில இந்திய வானொலி ஆன்றோர் சிந்தனையில் பங்கேற்றவர். ஜினநேசன் என்ற புனைப் பெயரும் இவருக்கு உண்டு.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்