Read in English / பிற மொழிகளில் படிக்க:
சென்னை: மக்களவையில் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான – மத்திய பட்ஜெட் 2024 – முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (23.7.24) தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் 2024-இல் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
உள்ளடக்கம்
மத்திய பட்ஜெட் 2024 – வருமான வரியில் மாற்றம் என்ன?
- புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
- புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது.
- ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் உடையவர்களுக்கு 5 சதவீதம் வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
- 10 முதல் 12 லட்சம் வரையிலும் 15 சதவீதம் வரி, 12 முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி.
- 15 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
- பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
- வரும் 5 ஆண்டுகளில் 1000 ஐடிஐக்கள் உருவாக்கப்படும்.
- உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
- 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
- நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
- பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
- வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- முதன் முறையாக பணிக்கு செல்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ரூ.15 ஆயிரம் வரை செலுத்தப்படும்.
- வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகைகள்
- உற்பத்தித் துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.
- சிறு, குறு நிறுவனங்களுக்கு உத்தரவாதம் இன்றி இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
- முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்திய தொழில் முனைவோருக்கு இக்கடனுதவி கிடைக்கும்.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்
- பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியரர் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.
- தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் உயர்கல்விக்கு கடனுதவி
- நடப்பாண்டு பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
- உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவியை அரசு அளிக்கும். இந்த உதவி இ-வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும்.
- இது ஆண்டுதோறும் நேரடியாக ஒரு லட்சம் மாணவர்களுககு வழங்கப்படும். கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.
டிஜிட்டல் மயமாகிறது வேளாண் துறை
- வேளாண் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
- விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவிகள் நபார்டு மூலம் வழங்குவது எளிதாக்கப்படும்.
- அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தத் திட்டம்.
- எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
- நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுககீடு செய்யப்படும்.
- தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின்நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை.
- புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கபபடும்.
- மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
- தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும்.
- பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படும்.
- அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது.
- அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படும்.
- வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதமாக இருந்த வரி 34 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
- 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts
தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்