🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

மக்களவை சபாநாயகர் தேர்தல் புதிதல்ல!

Read in English / பிற மொழிகளில் படிக்க:


சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 தடவை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடைபெறும் சபாநாயகர் தேர்தல் 4-ஆவது முறையாகும்.
கடந்த காலங்களில், மக்களவை சபாநாயகர் தேர்தல்கள் 1952, 1967 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்கிறது. இதனால் இந்த வித்தியாசமான தேர்தல்கள் பற்றி நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1952 தேர்தல்

1952-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு சபாநாயகர் பதவிக்கு மாவலங்கரை முன்மொழிந்தார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரும், இடதுசாரித் தலைவருமான ஏ.கே.கோபாலன், சந்தர் சந்தானத்தை முன்மொழிந்தார்.
அதனால் அப்போது மக்களவை சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் அத்தேர்தலில் மவ்லாங்கர் 394 வாக்குகளைப் பெற்றார். சங்கர் சந்தானம் 55 வாக்குகளைப் பெற்றார்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

காமெடி பஞ்சாயத்து முடிந்தது

1967 தேர்தல்

1967-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை அடுத்து சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. அத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியும், தென்னேதி விஸ்வநாதனும் போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி 278 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக 207 வாக்குகளை தென்னேதி விஸ்வநாதன் பெற்றார். இதையடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகர் ஆனார்.

1976 தேர்தல்

1976-ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலான இடங்களை வென்றன.

எனவே, மக்களவை சபாநாயகர் பதவிக்கு பலிராம் பகத், ஜன்னாத் ராவ் ஆகியோர் போட்டியிட்டார்கள்.
இத்தேர்தலில் பலிராம் பகத் 344 வாக்குகளைப் பெற்றார். ஜகன்னாத் ராவ் 58 வாக்குகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பலி ராம் பகத் சபாநாயகர் ஆனார்.

1990-ஆம் ஆண்டுக்கு பிறகு கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் தொடங்கியது. இதனால் சபாநாயகர் பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
1989-இல் தேசிய முன்னணி ஆட்சியில் அமர்ந்தது. அப்போது ஜனதாளத்தின் ரபி ராய் சபாநாயகர் ஆனார்.
1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது சிவராஜ் பட்டீல் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
1998-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி சபாநாயகர் ஆனார்.
1999-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன் பிறகு பாலயோகி சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பாலயோகி மரணம் அடைந்ததை அடுத்து சிவசேனாவின் மனோகர் ஜோஷி சபாநாயகர் ஆனார்.
2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அப்போது இடதுசாரிகளின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் ஆக்கப்பட்டார்.
2009-ஆம் ஆண்டு மீரா குமாரும், 2014-ஆம் ஆண்டில் சுமித்ரா மகாஜனும், 2019-ஆம் ஆண்டு ஓம் பிர்லாவும் சபாநாயகர் பதவிக்கு வந்தனர்.
நாடு விடுதலை அடைந்தப் பிறகு தற்போது 4-ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு போட்டி நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர்


இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகிறார்கள்.
இந்த சபாநாயகர் தேர்தல் மக்களவையில் 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 48 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *