Read in English / பிற மொழிகளில் படிக்க:
திறமையும், மதிநுட்பம் இருந்தால் வெற்றி காண முடியும் என்பதை சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு சிறுகதை விளக்குகிறது.
உள்ளடக்கம்
ஓவியம் வரையும் போட்டி
ஒரு நாட்டின் அரசன் வீரம் மிகுந்தவன். அவன் நாட்டை காப்பாற்ற பல போர்களைக் கண்டான்.
ஒரு கட்டத்தில் அவன் ஒரு போரில் வலது காலையும், முகத்தின் வலது பக்கத்தில் மிக ஆழமான தழும்புகளையும் பெற்றான். இதனால் அவனுடைய முகம் விகாரமடைந்தது.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஅவன் ஒரு நாள் தன்னை அழகாக ஓவியம் வரைந்து பார்க்க ஆசைப்பட்டான். அதனால் அவன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு அழைப்பு விடுத்தான்.
என் உருவத்தை அழகாக வரைந்து யார் தருகிறார்களோ, அவர்களை என்னுடைய அரச சபையின் ஆஸ்தான ஓவியராக நியமிக்க உள்ளேன் என்று அறிவித்தான்.
தயங்கிய ஓவியர்கள்
அரசவையின் ஆஸ்தான ஓவியராக மாறுவதற்கு ஆசை இருந்தும், அரசனின் விகாரமான முகத்தை எப்படி அழகாக வரைவது என்ற யோசனையால் எந்த ஓவியருமே அரசவைக்கு செல்லவில்லை.
அரசவையில் அன்றைக்கு அரசன் யாராவது ஓவியர் வருகிறார்களா என்று ஆவலோடு காத்திருந்தான். மாலை வரை காத்திருந்தும் யாரும் வரவில்லை. இதனால் மனம் சோர்வடைந்தான்.
அரசனை சந்தித்த சிறுவன்
அவன் அரசவையில் இருந்து புறப்பட்டத் தயாரானபோது, ஒரு சிறுவன் அரசனை காண வந்திருப்பதாக மெய்க்காவலர் சொல்லவே, அரசன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.
நாட்டில் பல சிறந்த ஓவியர்கள் இருப்பதை அறிவேன். அவர்களில் யாராவது ஒருவர் உங்களை வரைவார் என்று எதிர்பார்த்தேன்.
அதனால்தான் சிறுவனாக இருக்கும் நான் மாலை வரை வரவில்லை. நான் ஓரளவு ஓவியம் வரைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் இப்போது உங்களை வரைய வந்திருக்கிறேன் என்றான் சிறுவன்.
பெரிய பெரிய ஓவியர்களே, நாம் விகாரமான முகம், ஊனமுற்ற காலுடன் இருப்பதைக் கண்டு எப்படி அழகாக வரைவது என்று யோசித்துவிட்டு வராமல் போய்விட்டார்கள்.
இந்த சிறுவனோ நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்து கேட்கும்போது நான் ஒப்புக்கொள்வதுதான் நியாயம் என்று நினைத்து சரி… என்னை வரையத் தொடங்கு என்றான் அரசன்.
அரசரே… நீங்கள் ஒரு குதிரை மீது ஏறி அமருங்கள் என்றான். அவன் சொல்படியே அரசனும் ஏறி அமர்ந்தான்.
மதிநுட்பம் வரைந்த ஓவியம்
குதிரையில் அமர்ந்திருந்த அரசனை சில முறை சுற்றிசுற்றி வந்தான். அதன் பிறகு அரசன் குதிரையோடு பக்கவாக்காட்டில் நிற்கும் காட்சியை வரையத் தொடங்கினான்.
அரசனின் வலப்பக்க கால் ஊனமடைந்திருந்தது. அதேபோல் அவனுட்டு வலதுபக்க கன்னம் முழுமையாக சேதமடைந்திருந்தது.
இதனால் குதிரையில் ஏறி அமர்ந்திருந்த அரசனின் இடதுபக்கவாட்டு தோற்றத்தை தேர்வு செய்து வரையத் தொடங்கினான்.
சில மணி நேரத்தில் அரசன் குதிரையில் அமர்ந்திருக்கும் அழகான ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டது.

அந்த ஓவியத்தைக் கண்ட அரசனுக்கு ஒரே ஆச்சரியம் காரணம். அவன் குதிரையில் அமர்ந்திருக்கும் இடதுபக்க தோற்றத்தில் வலதுபக்க கால் மறைந்து போயிருந்தது. அவனுடைய விகாரமான வலதுபக்க கன்னமும் மறைந்து போயிருந்து. அதனால் அவன் கம்பீரமாக வாளுடன் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஓவியம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.
குதிரையில் இருந்து கீழே இறங்கிய அவன், சிறுவனை உச்சி முகர்ந்து நீ சிறுவனாக இருந்தாலும், நீ சிறந்த ஓவியனாக இருக்கிறாய் நீதான் என் அரசவையின் ஆஸ்தான ஓவியன் என அறிவித்தான்.
ஒரு சிறுவனிடம், உனக்கு என்னை அழகாக வரைய முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது என்று கேட்டான் அரசன்.
சிறுவன் சொன்ன ரகசியம்
அப்போது அந்த ரகசியத்தை சிறுவன் சொன்னான். ஒரு நாள் நான் ஒரு பானை படத்தை பயிற்சிக்காக வரையத் தொடங்கினேன். அது சரியாக அமையவில்லை.
அப்போது என் பாட்டி ஒரு பக்கம் உடைந்த பானையை கொண்டு வந்து கொடுத்து அதைப் பார்த்து வரைந்து பார் என்று சொல்லிவிட்டு போனாள்.
ஒருபக்கம் உடைந்த பானையை பார்த்து எப்படி வரைவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாட்டி என்னை பார்த்து இன்னுமா நீ பானையை வரையவில்லை என்று கேட்டாள்.
என்ன பாட்டி கிண்டல் செய்கிறாய். நீ கொடுத்ததோ உடைந்த பானை… அதை வைத்து எப்படி ஒரு நல்ல பானையை வரைவது என்றேன்.
அவள் சொன்னாள். ஒரு பக்கம் உடைந்தால் என்ன. மறுபக்கத்தில் இருந்து அந்த பானையை பார் முழுதாக அந்த பானை தெரியும் என்று சொன்னாள்.
அது என் பயிற்சி காலத்தில் நினைவில் பதிந்து விட்டது. அந்த நுட்பத்தைத் தான் உங்கள் படத்தை வரைய பயன்படுத்தினேன் என்று சொன்னான் சிறுவன்.
மனிதனும் மிருகமும் குட்டிக் கதை
இன்னைக்கு பள்ளிக் கூடத்துக்கு லீவா… அய்யய்யோ

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்