Read in English / பிற மொழிகளில் படிக்க:
சொத்துப் பத்திரங்கள் (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்து விட்டால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.,
உள்ளடக்கம்
முதல் தகவல் அறிக்கை
.முதலில் நாம் சொத்துப் பத்திரங்கள் தொலைந்து விட்டது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதியச் செய்ய வேண்டும்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஅவர்கள் தரும் ஒப்புகை ரசீதை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து அசல் பத்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது தொலைந்து போனது என்ற விவரங்களுடன் ஒரு தமிழ் நாளிதழ், ஒரு ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.

விளம்பரத்தில் தொலைந்து போன ஆவணங்கள் யார் கையிலாவது கிடைத்தால், தகவல் மற்றும் அனுப்புவது தொடர்பான விவரங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற வேண்டும்.
குறிப்பிட்ட நாள்கள் கழித்து காணாமல் போன பத்திரம் குறித்து யாரும தகவல் தராத நிலையில், காவல் நிலையத்தை அணுகி நாளிதழ் விளம்பரங்கள் அளித்து not traceable கடிதத்தை பெற வேண்டும்.
அதைத் தொடர்ந்து தொலைந்த பத்திரம் தொடர்பான ஆட்சேபனை இல்லை என்ற notary public ஒருவரின் சான்றிதழ் பெற வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகத்தை நாட வேண்டும்
பத்திரிகை விளம்பரம், காவல்துறை கடிதம், நோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆகியவற்றுடன் காணாமல் போன பத்திரத்தின் சர்வே எண் விவரங்கள் அடங்கிய தகவல்களை உங்கள் ஆவணங்கள் காணாமல் போன தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பித்த சில நாட்களில் நகர் பத்திரங்கள் நமக்கு கிடைக்கும்.

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்