Read in English / பிற மொழிகளில் படிக்க:
வாழ்க்கையில் நாம சில நேரங்களில் அவமானம் ஏற்படும் நிலை ஏற்படுவது உண்டு. இந்த அவமானத்தை எப்படி சந்திக்க வேண்டும். நாம் அவமானம் சந்திக்க வேண்டுமா? என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை கூறுகிறது.
உள்ளடக்கம்
அவமானம் ஏற்படும் போது…
அவமானம் ஏற்படும்போது, அதனால் ஏற்படும் விளைவுகளை 3 வகையாக பிரிக்கலாம். முதலாவது அவமானப்படும்போது அடங்கிப் போய்விடுவது. இரண்டாவது அவமானப்படும்போது கொதித்தெழுந்து கிளம்புவது. மூன்றாவது ரகம் முக்கியமான ஒன்று, அவமானப்பட்டால், அதை சவாலாக ஏற்று முன்னுக்கு வருவதற்கு துடிப்பது.
இந்த மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வரலாற்றில் மிகப் பெரிய இடத்தை நீங்காமல் பிடித்து சாதனைப் படைத்தவர்களாக இருக்கின்றனர்.
எப்போது முன்னேறுகிறோம்
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsமனோதத்துவ நிபுணர்கள் சொல்வதும் இதைத்தான். ஒருவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சவாலாக ஏற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் அதுவரை தான் கண்ட தோல்விகளுக்கு விடை கொடுக்க முடியும்.
you may also like THIS VIDEO
இறை நம்பிக்கை உடையவர்கள் தாங்கள் சந்திக்கும் அவமானங்களை விதி என்று சகித்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இறைவன் நிச்சயமாக நமக்கு ஒரு பாதையைத் திறந்து அவமானப்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையே காரணம்.
இதுதான் அவர்களை அவமானத்தில் இருந்து விடுபட வைத்து முன்னேற வைக்கிறது.

ஒருவர் எந்த அவமானத்தையும் சகித்துக் கொள்பவராக இருந்தால், அவருடைய வாழ்க்கையில் ஒன்றும் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தைக் காண்பதில்லை.
அதேபோல் அவமானத்தைக் கண்டு கொதித்தெழும் மனப்பான்மையும் பேராபத்து. ஒரே வழி அவமானத்தை உரமாக்கி, அதன் மூலம் வெற்றி காண உழைப்பதே புத்திசாலித்தனமானது என்கிறார்கள் வாழ்க்கையில் பல இடர்களைச் சந்தித்தவர்கள்.
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் சில அவமானங்களை சந்திக்கும் வரையிலும் எந்த பாதிப்பும் இன்றி, கவலையும் இன்றி எந்த முன்னேற்றமும் இன்றி மகிழ்ச்சியாக காலத்தைக் கழிப்போம்.
நாம் எப்போது அவமானத்தை சந்திக்கிறோமோ அப்போதுதான் நாம் நம்மை அவமானப்படுத்தியவர்களுக்காக முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுதான் நம்முடைய வெற்றி பாதை அமைத்து தரும்.

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்