🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தமிழ்நாடு அரசியல் குழப்பம்: Shocking 118 Hope and Risk

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தமிழகத்தின் தற்போதைய சூழலில் நிலவும் அரசியல் குழப்பம் என்பது மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் எதிரும் புதிருமாக உள்ள திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பது சாத்தியமா? என்ற அலசல் இது.

உள்ளடக்கம்

118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் என ஆளுநர் அர்லேக்கர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாநில அரசியலில் எதிர்பாராத பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால் ஆளுங்கட்சி யார் என்பதில் ஒரு பெரிய இழுபறி நீடிக்கிறது.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடுத்த சில மணிநேரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தவெகவின் அமைதி மற்றும் அரசியல் குழப்பம்

ஆளுநரின் இந்த அறிவிப்பு தவெக தலைமையைச் சற்று யோசிக்க வைத்திருந்தாலும், அவர்கள் சட்டரீதியான முன்னெடுப்புகளை அமைதியான முறையில் கையாண்டு வருகிறார்கள்.

இத்தகைய ஒரு சூழல் நிலவும் நிலையிலும் ஆளுநருக்கு எதிராக எந்தவித விமர்சனங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

108 இடங்கள் என்பது ஒரு மாபெரும் வெற்றி என்றாலும், ஆட்சியைக் கைப்பற்றத் தேவையான மேஜிக் நம்பரை எட்ட வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது.

இந்த மிகப்பெரிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வர மற்ற கட்சிகளின் ஆதரவை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிக அருகில் இருப்பதால், தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆதரவு திரட்டுவதில் உள்ள சவால்கள் தலைமையைச் சற்றே திகைக்க வைத்துள்ளது.

காங்கிரஸின் ஆதரவும் அதிமுகவின் தயக்கமும்

தவெக ஆட்சி அமைக்கத் தனது முழு ஆதரவை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதனால் தவெகவுக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகக் கருதப்பட்டாலும், இதுவே மற்ற சில கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் முட்டுக்கட்டையாகவும் அமைந்துள்ளது.

குறிப்பாக, அதிமுக தலைமை தவெகவுக்கு ஆதரவு அளிக்கத் தயங்குவதற்கு காங்கிரஸின் முன்கூட்டிய ஆதரவே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸுடன் கைகோர்க்க அதிமுக விரும்பாதது தற்போதைய அரசியல் குழப்பம் மேலும் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

அதிமுகவின் இந்தத் தயக்கம் காரணமாக அதன் கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளும் ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. இதுவும் அரசியல் குழப்பம் நிலவ வழிவகுத்துவிட்டது.

இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து சிக்கல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகளின் மௌனம்

மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இதுவரை தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இவர்களின் ஆதரவு யாருக்கு என்பதில் இன்னும் மர்மம் நீடிப்பதால் அரசியல் குழப்பம் தீர்ந்தபாடில்லை.

இந்தக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது திமுக தலைமையிலான அணிக்குத் திரும்புமா என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வி.

இவர்களின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் எப்படி ஆட்சி அமையும் என்ற அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும்.

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் கட்சிகளும், இடதுசாரி அமைப்புகளும் எடுக்கும் முடிவு தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடலாம். இல்லையென்றால் பழைய கூட்டணியைப் பலப்படுத்தி தற்போதைய அரசியல் குழப்பம் மேலும் தொடர வழிவகுக்கலாம்.

ஒருவேளை விடுதலை சிறுத்தைகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தந்தால் அது அக்கட்சிக்கு நிரந்தரமான ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இன்றைக்கு தவெக வெற்றியின் பின்னணியில் இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் கணிசமான வாக்குகளும் காரணம் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உணர்ந்திருக்கிறது.

அடுத்த 48 மணிநேரத்தில் என்ன நடக்கலாம்?

தற்போது நிலவும் இந்த பதற்றமான சூழலில், இன்னும் இரண்டு தினங்களுக்குள் ஆளுநரிடம் ஒரு தெளிவான பெரும்பான்மை பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் ஆளுநர் அடுத்த பெரிய கட்சியான திமுகவை அழைக்க வாய்ப்புள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

ஒருவேளை தவெக ஆட்சி அமைக்க முடியாமல் போனால், தமிழகத்தின் அரசியல் குழப்பம் முற்றிலும் வேறு திசையில் நகரத் தொடங்கும்.

குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றால், மீண்டும் ஒரு தேர்தல் அல்லது ஸ்திரமற்ற ஆட்சி நிலவும் அபாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி நீண்ட கால பாதிப்பை சந்திக்கும்.

இதை படித்தீர்களா? Top 6 Best No Hinder-தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு இல்லை

திமுக – அதிமுக கூட்டணி சாத்தியமா?

அரசியல் அரங்கில் எப்போதுமே எதிரெதிர் துருவங்களாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை அமைக்குமா என்ற ஆச்சரியமான கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி இவை ஒன்றிணைய வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைத்தால், தவெகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இது மாபெரும் அரசியல் குழப்பம் ஒன்றை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

நடுநிலையாளர்களைப் பொறுத்தவரை, யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை விட தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் இந்த அரசியல் குழப்பம் காரணமாக முடங்கிவிடக் கூடாது என்பதே பிரதான அக்கறையாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு ஸ்திரமற்ற ஆட்சி அமையும் சூழலில் குதிரை பேரம் தலைதூக்கும். அத்துடன் ஊழலும் எப்போதும்போல் தலைவிரித்தாடும் என்ற நிலையும் உள்ளது. இத்தகைய அரசியல் குழப்பம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது.

ஒருவேளை திமுக, அதிமுக குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஒன்றிணைந்து யாரோ ஒருவர் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும், அதை தமிழக மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இது தவெகவுக்கும் மற்ற சிறு கட்சிகளுக்கும் ஒரு சாதகமான வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்ற பேச்சும் எழுகிறது.

ஆனால் இரு திராவிட இயக்கங்களும் இணைந்து ஊழல் அற்ற ஒரு நேர்மையான ஆட்சியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடுப்பார்களேயானால் பல நன்மைகள் தமிழகத்துக்கு கிடைக்கும்.

ஆட்சியில் மீண்டும் லஞ்ச, லாவண்யம் தலைதூக்கினால் அதை தமிழக வெற்றிக் கழகம் தட்டிக் கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை தன் வளர்ச்சிக்கு அக்கட்சி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன் அரசியலில் புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒரு பயிற்சி களமாக இதை பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

இதையும் படியுங்கள்: 4 Bad Reasons: திமுக அதிர்ச்சித் தோல்வி ஏன்?

திமுக-அதிமுக இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானதா?

குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது மக்களின் மற்றொரு முடிவாகக் கூட எடுத்துக் கொள்ள முடியும்.

காரணம் இன்றைக்கு 108 தொகுதிகளை பெற்றிருக்கும் தவெக பெற்றுள்ள வாக்குகள் 35 சதவீதம். ஆனால் திமுகவும், அதிமுகவும் அவற்றின் கூட்டணி கட்சிகளும் பெற்ற வாக்குகள் 65 சதவீதம். இது ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல. பெரும்பாண்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு முடிவாகவே அமையும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் எச்சரிக்கை

யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை தங்கள் சுயநலத்துக்காக மிரட்டி காரியம் சாதிக்கும் சுயநலக்காரர்களின் குறிப்பாக அரசுப் பணிகளில் இருந்துகொண்டு மக்கள் வரிப்பணத்தில் பெரும்பாலான தொகையை ஊதியமாகப் பெற்றுக் கொள்வதோடு, தாங்கள் இல்லையென்றால் உங்கள் ஆட்சி இருக்காது என மாறிமாறி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மிரட்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த தயாராக வேண்டும்.

இத்தகைய கூட்டத்தினரால்தான் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழகம் பல நேரங்களில் பின்னடைவை சந்திக்கிறது. போதாக்குறைக்கு அரசு அலுவலகங்களில் வேலை பார்க்காமல் ஊதியம் பெறும் மனநிலையும், கையூட்டு இல்லாவிட்டால் கோப்புகளை நகர்த்தாத மனநிலையும் உள்ள போக்கு இன்னமும் நீடிக்கிறது. அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இன்னமும் மேம்படுத்த வேண்டியதும் உள்ளது.

இன்றைக்கு அரசு தொடர்பான எந்த இணையதளமும் சரியாக பராமரிப்பது இல்லை. அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தினமும் அவதிக்குள்ளாவதும் அதிகரித்து வருகிறது.

இவற்றை சீர்செய்தால்தான் அரசு நிர்வாகத்தில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். இதை குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு ஆட்சி அமைப்பவர்கள் கவனத்தில் கொள்வதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும். சிறப்பான நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தராத யாராக இருந்தாலும் பணிநீக்கம் போன்ற கடுமையான நடைமுறைகள் இனி வருங்காலத்தில் தேவை.

அதன் மூலம் மக்களின் தேவைகள் லஞ்ச, லாவண்யம் இன்றி நிறைவேறும் காலத்தை உருவாக்க முடியும்.

ஊழலும், லஞ்சமும் இல்லையெனில், அடுத்து வரும் இடைத் தேர்தலில் பணபலத்தை இருதரப்பும் பயன்படுத்த வாய்ப்பில்லை.

மூன்றாவதாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் ஒருவேளை பணபலத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டால், அதுவே அக்கட்சியின் கொள்கைக்கு எதிரானதாக மக்கள் மனதில் இடம்பிடிக்கும் என்பது அரசியல் பார்வையாக உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டம்

தமிழகம் தற்போது இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க ஒரு வலிமையான நிர்வாகம் அவசியம். தற்போதைய அரசியல் குழப்பம் எந்த வகையிலும் மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அரசியல் மாற்றங்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளால் மாநிலத்தின் நிர்வாகம் பாதிக்கப்படும்போது, தமிழகம் மீண்டும் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது. இது தவிர்க்கப்பட அரசியல் கட்சிகள் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

திராவிட கட்சிகள் துணிச்சலாக ஒன்றிணைந்து செயல்படுவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வாக அமையும்.

தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக என அனைத்து தரப்பும் மாநில நலனை முன்னிறுத்திச் செயல்பட்டால் மட்டுமே தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்.

இந்த விஷயத்தில் 3 கட்சிகளுமே பிடிவாதப் போக்கை கையாண்டால், இவர்கள் மூவரையும் நம்பி வாக்களித்த மக்கள் அடுத்த ஒரு ஸ்திரமான ஆட்சி அமையும் வரை இன்னலுக்கு ஆளாவார்கள் என்பதே நிஜம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற ஒரு பிரபலமான தமிழ் பழமொழியை இன்றைய அரசியல் கட்சிகள் நினைவில் கொள்வது நல்லது.

ஆளுநர் அர்லேக்கர் என்ன அறிவித்துள்ளார்?

118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என அறிவித்துள்ளார்.

தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சி எது?

காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்கத் தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

அதிமுக ஏன் ஆதரவு தரத் தயங்குகிறது?

தவெகவுக்கு ஆதரவு கரத்தை காங்கிரஸ் முந்திக்கொண்டு நீட்டியதால், காங்கிரஸுடன் இணைய அதிமுக தயக்கம் காட்டுகிறது.

திமுகவின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

திமுக சூழலைக் கவனித்து வருகிறது; தவெக ஆட்சி அமைக்கத் தவறினால் அடுத்த பெரிய கட்சியாக ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளது.

தவெக உறுப்பினர்கள் ஏன் ராஜினாமா செய்யப் போகிறார்கள்?

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசியல் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும்?

அடுத்த 48 மணிநேரத்திற்குள் கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்து இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்.

குறைந்தபட்ச செயல் திட்டம் என்றால் என்ன?

வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும்போது பொதுவான நற்பணிகளுக்காக உருவாக்கப்படும் திட்டமாகும்.

இந்த அரசியல் மாற்றத்தால் நிர்வாகம் பாதிக்கப்படுமா?

ஒரு நிலையான ஆட்சி அமையாவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் இரு கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் தவறில்லை. அதற்கான உதாரணங்கள் பல இருக்கின்றன.

எதிர் துருவங்களாக உள்ள திமுக-அதிமுக இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானதாக அமையாதா?

அமையாது. இப்போதைய தேர்தலில் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. திமுக-அதிமுக ஆகிய இரு அணிகளும் சேர்ந்து 65 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றன. இதனால் பெரும்பாண்மையான மக்களின் எங்களின் படி இவை இரண்டும் இணைந்து செயல்படுவது ஒன்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது அல்ல. இது குதிரை பேரத்தை விட மேலானது.

#TamilNaduPolitics #TVKVijay #GovernorArlekar #DMKvsAIADMK #TamilNaduNews #PoliticalCrisis #MithiranNews

நீங்க ஏன் இத்தனை நோய்களில் இருக்கீங்க? இந்த மூலிகைகள் போதும் உங்களுக்கு!

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *