Read in English / பிற மொழிகளில் படிக்க:
திமுக காங்கிரஸ் கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. தமிழக அரசியலில் சினிமா எப்போதுமே சமூகத்தின் கண்ணாடியாகவும், அரசியலின் திசைகாட்டியாகவும் இருந்துள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. மொழிப்பற்று, மாநில உரிமை என அந்தப் படம் பேசும் விஷயங்கள் மக்கள் மனதில் மாற்றத்திற்கான விதையைத் தூவியுள்ளன.
இந்தத் திரை அதிர்வு தற்போது சத்தியமூர்த்தி பவனிலும், அறிவாலயத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இம்முறை பிரச்சனை வெளியிலிருந்து வரவில்லை. அது கூட்டாளிக்குள்ளே இருந்தே வெடித்திருக்கிறது.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsபல ஆண்டுகளாகப் பிரிக்க முடியாத ஃபெவிகால் பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி, தேர்தல் நெருங்கும் வேளையில் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. அந்த திமுக காங்கிரஸ் கூட்டணி பந்தத்தில் விரிசல் விழும் சத்தம் இப்போது பலமாகவே கேட்கிறது.
உள்ளடக்கம்
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் புதிய போர்க்கொடி
காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல், “எங்களுக்கு அதிக சீட் வேண்டும், அதுவும் சும்மா இல்லை… ஆட்சியில் பங்கு வேண்டும்!” என்பதுதான்.
கடந்த தேர்தல்களைப் போல ஏதோ 25 சீட்டுகளை வாங்கிக்கொண்டு, திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார காங்கிரஸ் இந்த முறை தயாராக இல்லை.
ஒரு குறிப்பிட்ட பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள், “நாம் ஏன் ஒவ்வொரு முறையும் திமுகவின் தயவிலேயே நிற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
“வடக்கே ராகுல் காந்தியின் இமேஜ் உயர்ந்திருக்கிறது. கர்நாடகா, தெலங்கானாவில் வெற்றி பெற்றிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் நாம் அடிபணிந்து போக வேண்டும்?” என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இது திமுக தலைமைக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆட்சியில் பங்கு” என்று காங்கிரஸ் கேட்பது, திமுகவின் தனிப்பெரும்பான்மை கனவுக்கு வைக்கப்படும் வேட்டு.
திமுக காங்கிரஸ் கூட்டணி: வாக்குகள் மாறுமா?
கூட்டணிக்காக திமுக இடங்களை விட்டுக் கொடுத்தாலும், கள நிலவரம் திமுகவுக்கு முழுமையாகச் சாதகமாக இல்லை என்பதே நிதர்சனம்.
இங்குதான் ஒரு முக்கியமான, அதே சமயம் ஆபத்தான சிக்கல் எழுகிறது. ஒருவேளை, டெல்லித் தலைமை உத்தரவிட்டது என்பதற்காக இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து திமுக காங்கிரஸ் கூட்டணியாக உருவெடுத்தாலும், அது ஓட்டாக மாறுமா?
களத்தில் இருக்கும் திமுக உடன்பிறப்புகள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 2016 சட்டமன்றத் தேர்தல் காயங்கள் இன்னும் ஆறவில்லை.
அன்று காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று, அதில் மிகக் குறைவான இடங்களிலேயே வென்றது. இதனால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது என்ற பழைய காயம் திமுகவினரிடம் உள்ளது.
“நாங்கள் உழைத்து, வியர்வை சிந்தி, இவர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்தால், இவர்கள் ஜெயித்துவிட்டு எங்களை மதிப்பதில்லை” என்ற ஆதங்கம் திமுக தொண்டர்களிடம் கனன்று கொண்டிருக்கிறது.
இதனால், தேர்தல் என்று வரும்போது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், திமுகவினரின் ஓட்டு முழுமையாக ‘கை’ சின்னத்திற்கு விழுமா என்பது மிகப்பெரிய சந்தேகமே.
ராகுல் காந்திக்கு உள்ள நெருக்கடி
அதேபோன்ற மனநிலை காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் கூட ஏற்படக்கூடும். “ஆட்சியில் பங்கு தராத திமுகவுக்காக நாம் ஏன் வேலை பார்க்க வேண்டும்?” என்ற எண்ணம் அவர்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாது.
“கூட்டணி தர்மம்” என்று மேடையில் தலைவர்கள் கைகோர்த்துப் பேசலாம். ஆனால் வாக்குச்சாவடியில் தொண்டர்களின் மனநிலை வேறாக இருக்கும். இந்த ‘உள்ளடி வேலை’ இரு கட்சிகளுக்குமே ஆபத்தாக முடியலாம்.
இந்தச் சூழலில், திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது உடையுமா என்பதை ராகுல் காந்தி இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும், திமுக காங்கிரஸ் கூட்டணியில், இரு கட்சித் தொண்டர்களிடைடே இடைவெளியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய் பக்கம் திரும்பும் காங்கிரஸ்?
காங்கிரஸ் ஏன் இவ்வளவு தைரியமாக திமுகவை நெருக்குகிறது தெரியுமா? அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அந்த மாற்றுப் பாதை – தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்!
திமுகவின் பிடிவாதம் ஒருவேளை எல்லை மீறினால், காங்கிரஸ் தயங்காமல் விஜய் பக்கம் தாவக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன.
அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது 2026 தேர்தலின் போக்கையே தலைகீழாக மாற்றிவிடும். தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் விஜய்க்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கும்.
மிக முக்கியமாக, சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு மடைமாற்றப்படும். காங்கிரஸ் விஜய்யுடன் சேரும்போது, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சிறுபான்மையினர் வாக்குகள் பிரியும்.
இது திமுகவின் வெற்றி வாய்ப்புக்கு மரண அடியாக விழும் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. விஜய்யின் புதுமையும், காங்கிரஸின் பாரம்பரியமும் இணைந்தால் வெற்றியைப் பறிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
ஸ்டாலினின் 160 சீட் வியூகம்
மறுபுறம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2026 தேர்தலைத் தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு ‘கௌரவப் போராட்டமாகப்’ பார்க்கிறார்.
கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்தால், வெற்றி பெற்றாலும் திமுகவின் பலம் குறைந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும்.
தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டால், ஒவ்வொரு மசோதாவுக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் கெஞ்ச வேண்டி வரும். எனவே, சுமார் 160 முதல் 170 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
மீதமுள்ள சொற்ப இடங்களில்தான் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் மநீம போன்ற கட்சிகளைச் சரிக்கட்ட அறிவாலயம் நினைக்கிறது.
வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை மட்டுமே தருவோம் என்பதில் திமுக மேலிடம் மிகத் தெளிவாக உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் பிரிந்து செல்வதையும் திமுக விரும்பவில்லை.
தேசிய அரசியலில் ‘இந்தியா’ கூட்டணியில் திமுக முக்கிய அங்கமாகத் தொடர காங்கிரஸ் ஆதரவு தேவை. இந்தச் சிக்கலான முடிச்சை ஸ்டாலின் எப்படி அவிழ்க்கப் போகிறார் என்பதே சஸ்பென்ஸ்.
காங்கிரஸின் ஆபத்தான சூதாட்டம்
நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி உடைவது காங்கிரஸுக்கு ஒரு ஆபத்தான சூதாட்டம்.
ஒருவேளை விஜய் உடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தித் தேர்தலைச் சந்தித்து, அது தோல்வியில் முடிந்தால் என்ன ஆகும்?
ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாமல் போனால், அடுத்து வரும் 2029 மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
தற்போது காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் எம்.பி-க்கள் எண்ணிக்கையைக் கூட இழக்க வேண்டி வரும். திமுக என்ற வலுவான கட்டமைப்பை விட்டுவிட்டுச் செல்வது நடுக்கடலில் தோணியை மாற்றுவதற்குச் சமம்.
கரை சேர்ந்தால் சரி, இல்லையென்றால் எதிர்காலத் தமிழக அரசியலில் காங்கிரஸின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

இன்றைய சூழலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 2026 தேர்தல் களத்தில் ஃபெவிகால் பந்தமாக தொடருமா இல்லை. விஜய் கட்சிக்கு தாவுமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆக, “ஆட்சியில் பங்கு” தராவிட்டால், “கூட்டணியில் பங்கு இல்லை” என்று காங்கிரஸ் வெளியேறுமா? அல்லது பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
சட்டப் பேரவையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு
விடியோவில் வடிவில் – ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ்
திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்னை குறித்து அலசும் இந்த விடியோவை காணத் தவறாதீர்கள்.

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்